ADDED : நவ 10, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பாவு மகன் ராஜீவ்காந்தி, 40; பழனிவேல் மகன் கணேஷ், 32; அப்பாவு, 71; மற்றும் மழவராயனுார் கிராமத்தை சேர்ந்த காளி, 39; ஆகிய நான்கு பேரை கைது செய்து இவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.