/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
/
காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
காவல்துறை பெண் அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
ADDED : செப் 29, 2024 06:45 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல் துறை பெண் நிர்வாக அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், சாலமேடு என்.ஜி.ஓ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சாந்தி, 50; இவர், உளுந்துார்பேட்டையில் 10வது பட்டாலியன், காவல் படை அலுவலக நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் புதுச்சேரியில் அரசு பணியில் உள்ளார்.
இருவரும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.