/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைதீர் நாள் கூட்டத்தில் 407 கோரிக்கை மனுக்கள்
/
குறைதீர் நாள் கூட்டத்தில் 407 கோரிக்கை மனுக்கள்
ADDED : நவ 05, 2024 07:02 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 407 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் கோரிக்கை மனுக்கள் பெற்று, விசாரணை மேற் கொண்டு தொடர்புடைய அலுவலர்கள், அந்த மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என உத்தர விட்டார்.
இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 407 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
குறிப்பாக, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, உடனடி தீர்வு காண வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.