/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
ADDED : அக் 05, 2024 04:17 AM
கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் சொத்து வரியை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி கமிஷனர் புகேந்திரி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரி செலுத்துவதற்காக வரும் 31ம் தேதி வரை சனிக்கிழமை உட்பட காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் கம்யூட்டர் வசூல் மையம் செயல்படும்.
மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தள வழியாகவும் சொத்து வரியை செலுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.