/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு
/
அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு
ADDED : அக் 27, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பெண் அரசு ஊழியரிடம் 5 சவரன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு, நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி அமுதா, 58; அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர். இவர் நேற்று காலை, 7:30 மணிக்கு, தந்தை பெரியார் நகரில் காய்கறி வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரது பின்னால் பைக்கில் முகமூடி அணிந்து வந்த இருவர் அமுதா கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

