sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு

/

பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை திருட்டு


ADDED : ஏப் 30, 2025 07:14 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; பஸ்சில் மூதாட்டியிடம் 5 சவரன் நகையை திருடிச் சென்ற சம்பவத்தில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அண்ணா நகர் காலனி அமாவாசை மனைவி வேலுத்தாய், 60; இவரை, மதுரை மாவட்டம், முத்துபாண்டிபட்டி மகாராஜன், 21; என்பவர், சமையல் வேலை செய்ய காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் ஒரு அரிசி குடோனிற்கு அழைத்து சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த தமிழன், 22; நக்கல்பட்டி இந்திரா, 42; ஆகியோரும் வேலை செய்தனர்.

இரண்டு மாதம் முன், வேலையில்லை என கூறி வேலுத்தாயை காஞ்சிபுரத்தில் இருந்து மதுரைக்கு, தமிழன் பஸ் ஏற்றி விட்டார். வேலுத்தாயுடன் பஸ்சில் பயணித்த ஒருவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, 5 சவரன் நகையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு இறங்கி சென்றுவிட்டார்.

நகையை திருடிச் சென்ற நபர் மகாராஜன் உள்ளிட்ட மூன்று பேரும் அனுப்பியதாக, வேலுத்தாய் போலீசில் புகார் கொடுத்தார். மகாராஜன் உள்ளிட்ட மூவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us