/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதிமுறைகளை மீறி காத்திருப்பு போராட்டம்: மா.கம்யூ.,வினர் 50 பேர் கைது
/
தேர்தல் விதிமுறைகளை மீறி காத்திருப்பு போராட்டம்: மா.கம்யூ.,வினர் 50 பேர் கைது
தேர்தல் விதிமுறைகளை மீறி காத்திருப்பு போராட்டம்: மா.கம்யூ.,வினர் 50 பேர் கைது
தேர்தல் விதிமுறைகளை மீறி காத்திருப்பு போராட்டம்: மா.கம்யூ.,வினர் 50 பேர் கைது
ADDED : மார் 19, 2024 10:50 PM

வானுார் : தேர்தல் விதிமுறைகளை மீறி, வானுார் தாசில்தாரை கண்டித்து, தாலுகா அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடத்திய மா.கம்யூ., நிர்வாகிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
எடச்சேரி கிராம சர்வே எண்ணில், தற்போது வழங்கப்பட்டுள்ள பட்டா எண்ணை ரத்து செய்து, உண்மையாக பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
லஞ்சம் பெற்றுக்கொண்டு நில மோசடி நபர்களுக்கு சிட்டா, பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை முறைகேடாக தயாரித்து பத்திர பதிவுக்கு துணை போகும் தாசில்தார், வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி நேற்று மா.கம்யூ.., வானுார் வட்டக்குழு சார்பில், தாலுகா அலுவலகம் எதிரே வட்ட செயலாளர் முருகன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சிவராஜன் மற்றும் போலீசார், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், போராட்டத்தை தள்ளி வைக்கும் படி அறிவுறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மா.கம்யூ., நிர்வாகிகள், 35 பெண்களுடன், திடீரென காஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

