sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

6 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு; இருவர் கைது : 35 சவரன் பறிமுதல்

/

6 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு; இருவர் கைது : 35 சவரன் பறிமுதல்

6 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு; இருவர் கைது : 35 சவரன் பறிமுதல்

6 வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு; இருவர் கைது : 35 சவரன் பறிமுதல்


ADDED : ஜன 07, 2025 07:36 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் 6 வீடுகளில் புகுற்து நகை மற்றும் பணம் திருடிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் நகர பகுதிகளில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, எஸ்.பி., சரவணன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வ விநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியே பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த மணி(எ)பாலகிருஷ்ணன்,38; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(எ)சாமுவேல்,40; ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள், விழுப்புரம் நகர பகுதிகளில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 35 சவரன் நகைகள், ரூ.1,90,000 பணம் மற்றும் ஒரு பைக், இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

இருவரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான இருவர் மீதும், திருச்சி, சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், அரக்கோணம் உட்பட பல மாவட்டங்களில் 35க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us