/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது
/
கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது
ADDED : பிப் 23, 2024 11:52 PM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி., தனி பிரிவு போலீசார் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், கிராவல் மண் ஏற்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கிராவல் மண் கடத்திய திருக்கோவிலுார், சின்னவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சரவணன், 25; சங்கர் மகன் ஐயப்பன், 20; உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.