/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேர் கைது
ADDED : நவ 24, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று அதிவேகமாக பைக் ஓட்டியதாக திண்டிவனத்தை சேர்ந்த சர்புதீன், 43; விஜயகுமார், 36; அரகண்டநல்லுார் வெற்றிவேல், 26; முத்தியால்பேட்டை சுரேஷ்குமார், 21; திண்டிவனம் பெலாக்குப்பம் மனோகரன், 35; மரக்காணம் ஓமிப்பேர் சிவா, 27; தைலாபுரம் சந்திரன், 21; செஞ்சி சிலம்பரசன், 28; ஆகிய 8 பேரை, அந்தந்த பகுதி போலீசார், வழக்கு பதிந்து கைது செய்தனர்.

