/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ . தி . மு . க ., தெருமுனை பிரசாரம்
/
அ . தி . மு . க ., தெருமுனை பிரசாரம்
ADDED : செப் 24, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து சேர்ந்தனுாரில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, தலைமை பேச்சாளர் அரங்க சத்தியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி., சங்கர் ஆகியோர் தி.மு.க., ஆட்சியை கண்டித்து பேசினர்.
அப்போது, ஒன்றிய விவசாய அணி செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய ஜெ., பேரவை இணை செயலாளர் குமரவேல், ஒன்றிய துணை செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தவமணி, கிளை நிர்வாகிகள் கார்த்திக், முருகன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.