/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாமியாரை தொடர்ந்து மனைவியும் சாவு வாலிபர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு
/
மாமியாரை தொடர்ந்து மனைவியும் சாவு வாலிபர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு
மாமியாரை தொடர்ந்து மனைவியும் சாவு வாலிபர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு
மாமியாரை தொடர்ந்து மனைவியும் சாவு வாலிபர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு
ADDED : பிப் 17, 2026 04:13 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வாலிபர் தாக்கியதில், மாமியாரை தொடர்ந்து, மனைவியும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துாரை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி, 65; இவர், பாவந்துாரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கடந்த 6ம் தேதி இரவு 11:00 மணியளவில் மகள் மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சிவா, மீனாவை தாக்கினார். தடுத்த மாமியார் தனலட்சுமியையும் தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த தனலட்சுமி மயங்கி விழுந்து இறந்தார். படுகா யத்துடன் மீனா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து சிவாவை, 30; கைது செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சையிலிருந்த மீனா, 26; நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சிவா மீது ஏற்கனவே கொலை வழக்குப் பதிந்த நிலையில், தற்போது, இரட்டை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

