/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்பத் தகராறு மெக்கானிக் தற்கொலை
/
குடும்பத் தகராறு மெக்கானிக் தற்கொலை
ADDED : செப் 29, 2024 06:43 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில் டூ வீலர் மெக்கானிக் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் பாரதி, 28; டூ வீலர் மெக்கானிக். இவர், சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்குமிடையே கடந்த 25ம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதனால், பாரதி மனைவி சந்தியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த பாரதி அன்றே வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.
உடன் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் இறந்தார்.
இது குறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.