ADDED : செப் 28, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே 2 மொபட்டுகள் மோதிக்கொண்டதில் விவசாயி இறந்தார்.
கொரட்டூர் காலனியைச் சேர்ந்தவர்சேகர் மகன் அன்புபாகலன், 28; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:10 மணியளவில் பெரியசெவலை - கொரட்டூர் நோக்கி மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மொபட், இவர் ஓட்டிச் சென்ற மொபட்டில் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த அன்புபாகலன் விழுப்புரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.