/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி சாவு
/
போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி சாவு
ADDED : நவ 01, 2024 11:30 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடி போதையில் தவறி கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 46; கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். முருகன் குடிப்பழக்கம் உடையவர். இவர், கடந்த 30ம் தேதி இரவு 7:50 மணிக்கு, குடிபோதையில் முத்தாம்பாளையம் முருகன் கோவில் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு கட்டையில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தடுப்புக் கட்டையிலிருந்து கிழே விழுந்தததில் தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.