sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்

/

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்


ADDED : டிச 23, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது.

அப்போது, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மக்களுடன் முதல்வர் முகாம், விவசாய குறைதீர்க்கும் நாள் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் இருந்து வரும், வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிய பொது மக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

ஏற்கனவே வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, கிராம கணக்குகளில் திருத்தம் செய்யாமல் உள்ளவர்களுக்கும், கணக்கு திருத்தம் செய்து வழங்கிடவும், மேலும், ஆதி திராவிடர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாகளுக்கும் இ-பட்டா வழங்கிடவும், அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் கூறினார்.

இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து மற்றும் முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us