/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குவாரி வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி ஒத்திவைப்பு
/
குவாரி வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி ஒத்திவைப்பு
ADDED : பிப் 15, 2024 09:10 PM
விழுப்புரம்:பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உறவினர் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய எட்டு பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று இவ்வழக்கில் தற்போது அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது
அப்போது, வழக்கில் தொடர்புடைய சதானந்தன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகினர். மற்றவர்கள் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.