ADDED : அக் 03, 2025 07:31 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் வட கிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வமூர்த்தி, தாசில்தார்கள் தட்சணாமூர்த்தி, பாரதிதாசன் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் தமிழரசன் வரவேற்றார். கூட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. காவல், தீயணைப்பு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
