/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : பிப் 14, 2024 03:20 AM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த செட்டிக்குப்பம் கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.
கால்நடைகள் பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, தோட்டகலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினர்.
வேளாண்மை துறையின் மூலம் குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள், உயிர் உரங்கள், மின்கல தெளிப்பான் விநியோகம் மற்றும் நெற்பயிருக்கு சிங் சல்பேட், ஜிப்சம், தார்பாய் உள்ளிட்ட பொருட்களைப் பெற விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்வது கொள்ளவேண்டும்.
பி.எம்.கிசான் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் நேரடி பட்டா தேவைப்படுவதால் அதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற வேண்டும் என விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
கால்நடை உதவி மருத்துவர் சாந்தி, வேளாண்மை அலுவலர் தேவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மஞ்சு, கவிதா உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

