ADDED : மார் 15, 2025 08:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த ஆத்திப்பாக்கத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாலமுருகன், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, ஒன்றிய அவைத் தலைவர் ரங்கநாதன், அண்ணா தொழிற்சங்கம் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்.மன்றம் முருகானந்தம், இளைஞரணி பூபால், விவசாய அணி சீனுவாசன், பேரவை ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.