ADDED : ஜூலை 06, 2025 04:25 AM

வானுார்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன், மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வரும் 10, 11ம் தேதிகளில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் 11ம் தேதி வானுார் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை ஒட்டி, வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய நிர்வாகிகளுடன், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
திருச்சிற்றம்பலத்தில் நடந்த கூட்டத்திற்கு சக்ரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், கோட்டக்குப்பம் நகர செயலளார் கணசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், ஐ.டி.,பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மண்டல இணை செயலாளர் எழில்ராஜ், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் வெற்றிவேந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், அணி செயலாளர்கள் கார்த்திகேயன், வீரப்பன், குணசேகரன், ரமேஷ், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சாமிதுரை, ஜெகன், சுமன், ரவி, மாலா, மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, அம்பேத்குமார், சித்ரா உமாபதி, கவுன்சிலர் பிரகாஷ், பாசறை மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் ராஜா, ஜெய்பீம், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.