ADDED : ஜன 26, 2026 04:15 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். தெற்கு நகர செயலாளர் பசுபதி துவக்கவுரை ஆற்றினார்.
ஒன்றிய செயலளர்கள் சுரேஷ்பாபு, முருகன், ராமதாஸ், கண்ணன், ராஜா, முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் மொழிப்போராட்ட வரலாறு குறித்து பேசினர்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர்கள் அற்புதவேல், சங்கர், ஏழுமலை, ஜெ., பேரவை இணைச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, பொருளாளர் வெங்கடேசன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பிரித்திவ்ராஜ். மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ்.
ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், விநாயகமூர்த்தி, நடராஜன், சேகரன், விஜயன், புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், கோவிந்தசாமி, சோழன், பன்னீர், முகுந்தன், பன்னீர், கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மன், நடராஜன், பக்தவத்சலம், சதீஷ்குமார், நகர செயலாளர்கள் ரூபன்ராஜ், கணேசன், பூர்ணராவ், சுந்தரராஜ், சங்கர், கனகராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

