/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., வழக்கறிஞர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.ம.மு.க., வழக்கறிஞர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 10, 2025 03:37 AM

விழுப்புரம்: காணை ஒன்றிய முன்னாள் அ.ம.மு.க., செயலாளர் பொன் சிவா. முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பொன் சிவாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மகளிர் அணி ஜெகதீஸ்வரி சத்யராஜ், கவுன்சிலர் ராதிகா செந்தில், வழக்கறிஞர்கள் தமிழரசன், சஞ்சய் காந்தி, அலாவுதீன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சரவணன் உடனிருந்தனர்.

