ADDED : அக் 08, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் மயிலம் அடுத்த பொம்பூர் கூட்ரோட்டில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் 24 டின் பீர் மற்றும் 10 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன் பாதிரியாபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன், 36; என்பவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.