/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
ADDED : மே 04, 2025 04:11 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு ஒப்புதல் அளித்தபடி ஒரு மாத கால கோடை விடுமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக தொடர்ந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சுதா தலைமை தாங்கினார். மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் மலர்விழி, துணை தலைவர் சரளா, துணை செயலாளர் தீபா உட்பட 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.