/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
/
சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
ADDED : ஜூன் 09, 2025 11:24 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அருகே வி.மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை,50; இவர், வளவனுார் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிகிறார். அதே அலுவலகத்தில் வளவனுாரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி,45; என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.
கடந்த 3 மாதங்களாக சாமுண்டீஸ்வரிக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதையொட்டி, சாமுணடீஸ்வரி துாண்டுதலின் பேரில், இதே பகுதியை சேர்ந்த ஞானவேல்,49; கடந்த 4ம் தேதி வளவனுார் பேரூராட்சி அலுவலகம் முன்பு, செயல் அலுவலர் அண்ணாதுரையை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார்.
வளவனுார் போலீசார் ஞானவேல், சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.