/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
/
முதல்வர் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 18, 2025 04:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மாநில இளைஞர் விருது பெற தகுதியுள்ளோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவை புரியும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்க சுதந்திர தின விழாவில், முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் வழங்கப்படும்.
2024ம் ஆண்டிற்கான முதல்வர் மாநில இளைஞர் விருது வரும் ஆக. 15ம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் வரும் மே 3ம் தேதி மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டு ஏப்., 1ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மேற்கொண்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்தோடு தொண்டாற்றியிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லுாரிகள், பள்ளிகளில் பணிபுரிவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.