ADDED : ஆக 22, 2025 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 37 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதில், 21 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.
இந்த முகாமில், 164 பேர் கலந்து கொண்டதில், 37 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 13 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.