/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் அனைத்து ஓய்வூதியர்கள் பயன்பெற ஏற்பாடு
/
போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் அனைத்து ஓய்வூதியர்கள் பயன்பெற ஏற்பாடு
போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் அனைத்து ஓய்வூதியர்கள் பயன்பெற ஏற்பாடு
போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் அனைத்து ஓய்வூதியர்கள் பயன்பெற ஏற்பாடு
ADDED : நவ 01, 2024 11:32 PM
விழுப்புரம்: மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
புதுச்சேரி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் காவ்யா செய்திக்குறிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களைத் தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். 2014ம் ஆண்டில் அரசு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை அறிமுகப்படுத்தியது.
இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் //ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி அல்லது 'Postinfo' செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம்.
இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நேற்று 1ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமன்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.