/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் கைது
ADDED : பிப் 08, 2025 09:08 PM

திண்டிவனம்: கல்லுாரி மாணவியிடம் மொபைல் போனில் பேசி, பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, இன்ஜினியர் காலனி, ஜெயமூர்த்தி ராஜா நகரைச் சேர்ந்தவர் குமார், 47; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு கல்லுாரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், இக்கல்லுாரியில் படிக்கும் 17 வயது மாணவியிடம் மொபைல் போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லுாரி முதல்வரிடம், பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மாணவிக்கு உதவி பேராசிரியர் குமார் 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தது நிரூபணமானது.
அதனைத் தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, உதவி பேராசிரியர் குமாரை கைது செய்தனர்.