/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீதிமன்றத்தில் ஆஜாராமல் டிமிக்கி கொடுத்தவர் கைது
/
நீதிமன்றத்தில் ஆஜாராமல் டிமிக்கி கொடுத்தவர் கைது
ADDED : அக் 05, 2024 04:15 AM

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலம் மேட்டுக்காடு தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் கார்த்திக், 23; கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக், அதன் பிறகு போக்சோ வழக்கிற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை கைது செய்து, ஆஜர்ப்படுத்தும் படி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், கோட்டக்குப்பம் மகளிர் போலீசார், நேற்று கீழ்புத்துப்பட்டில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கோழிப்பண்ணையில் வேலை செய்த கார்த்திக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.