sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்

/

சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்

சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்

சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : அக் 27, 2024 11:43 PM

Google News

ADDED : அக் 27, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது.

சிறுதானியங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் விவசாயிகளுக்கு கம்பு மற்றும் கேழ்வரகு செயல் விளக்கத் திடல்கள் அமைக்க விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிரசார வாகனத்தின் மூலம் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயி மத்தியில் ஏற்படுத்தவும், சாகுபடி குறித்தான தொழில் நுட்பங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கியும், சிறுதானியங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வானுார் வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் உஷா பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் பஞ்சநாதன், ஜெயலட்சுமி , உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us