ADDED : டிச 18, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி, பஸ் நிலையத்தில், விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், செயல் அலுவலர் ஷேக் லத்திப் முன்னிலை வகித்தனர். செல்லாங்குப்பம் இளந்தென்றல் கலைக்குழு சார்பில் பொதுமக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.