ADDED : மார் 15, 2024 11:03 PM
விக்கிரவாண்டி: பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊராட்சி தலைவர் பூவராகவன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வள்ளி, துணைத் தலைவர் பிரபாவதி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் கவிதா விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்து , பொதுமக்களிடம் மாணவர்கள் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின், உலக மகளிர் தினவிழாவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், சம்பூர்ணம், விஜயலட்சுமி, அருணா, கல்வியளர்கள் முத்து ஏழுமலை, திருமுருகன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சங்கங்கள், துாய்மைப் பணியாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

