ADDED : பிப் 17, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோஷமிட்டுச் சென்றனர்.
ஊர்வலத்தில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் குமரகுரு ஒருங்கிணைத்தார்.

