ADDED : நவ 24, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து.
இந்திரா காந்தி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பார்கவி, டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், தாசில்தார் சிவா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரேமலதா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.