ADDED : நவ 01, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் சர்வதேச லஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஊர்வலத்தை, எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மற்றும் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

