/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துக்கத்தில் துாக்கிட்டுக் கொண்டவர் பலி
/
துக்கத்தில் துாக்கிட்டுக் கொண்டவர் பலி
ADDED : ஜன 31, 2024 05:41 AM
செஞ்சி, : செஞ்சி அருகே அக்காவின் மகன் விபத்தில் இறந்த துக்கம் தாளாமல் துாக்குப்போட்டுகொண்டவர் இறந்தார்.
செஞ்சியை அடுத்த மாத பூண்டி மதுரா ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கார்த்திகேயன் 35. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கடந்த 20ம் தேதி கார்த்திகேயனின் அக்கா மகன் முருகன் விபத்தில் இறந்தார்.
இந்த துக்கம் தாளாமல் கார்த்திகேயன் கடந்த 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மது போதையில் தனது வீட்டில் துாக்கு போட்டுக்கொண்டார்.
வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். புகாரின் பேரில் நல்லன்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.