ADDED : அக் 02, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் இறந்தார்.
வானுார் அடுத்த ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வாழ்முனிஸ்வரன், 60; இவரது மகன் கோவிந்தன், 39; இருவரும் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் இருந்து சேதராப்பட்டு நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர். பைக்கை கோவிந்தன் ஓட்டினார்.
வானுாரில் சென்றபோது, சேதராப்பட்டில் இருந்து வந்த ஸ்டார் சிட்டி பைக், கோவிந்தன் பைக் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் கோவிந்தன், வாழ்முனிஸ்வரன் படுகாயமடைந்தனர். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று காலை 6:00 மணிக்கு கோவிந்தன் இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

