ADDED : டிச 17, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் பா.ஜ., தொகுதி மாநாடு மற்றும் பயிலரங்கம் நடந்தது.
அமைப்பாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வினாயகம் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ரங்கராஜனும், அரசியல் குறித்து மாஜி எம்.எல்.ஏ., கலிவரதனும் விளக்கிப் பேசினர்.
மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், துணைத் தலைவர்கள் ஏழுமலை, ராதே கோகுல், விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் சிவகாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், நிர்வாகிகள் ஸ்ரீரங்கன், மேகலா, ஞானமணி, ஏழுமலை, அசோக்குமார் சரவணன், பிரசன்னா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒன்றிய தலைவர் தாராசிங் நன்றி கூறினார்.

