sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை பொதுமக்கள் எதிர்த்து முற்றுகை

/

ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை பொதுமக்கள் எதிர்த்து முற்றுகை

ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை பொதுமக்கள் எதிர்த்து முற்றுகை

ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை பொதுமக்கள் எதிர்த்து முற்றுகை


ADDED : செப் 25, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே கல்குவாரிக்கு செல்ல ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கொந்தமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு செல்ல ஏற்கனவே ஒரு பாதை உள்ளது. இருப்பினும் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பொதுப்பணித் துறையில் அனுமதி பெற்று, ஓடை வழியாக மாற்றுப் பாதை அமைத்துள்ளார்.

இதற்காக நேற்று முன்தினம் முதல் நீர் ஓடையை ஆக்கிரமித்து சாலை போடும் பணி நடந்தது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 9:00 மணியளவில் அங்கு திரண்டு ஹிட்டாச் முன் அமர்ந்து முற்றுகையிட்டு சாலை போட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி, அதில் முடிவடுத்துக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து, 12:00 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us