/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை
/
ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 05, 2025 04:38 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை பின்புற ரயில் பாதையில் நேற்று காலை 8:00 மணிக்கு, ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்த நபர் கன்னியாகுமரி அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் செல்சன், 34; என்பதும், நேற்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது.
ஆனால், அவர் எந்த ரயிலில் பயணித்தார், தற்கொலை செய்து கொள்ள ரயிலில் இருந்து குதித்தாரா, தவறி விழுந்து இறந்தரா, யாரேனும் கீழே தள்ளி கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

