/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அணைக்கட்டு அருகே பெண் சிசு உடல்
/
அணைக்கட்டு அருகே பெண் சிசு உடல்
ADDED : அக் 17, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலத்தை வீசி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் பம்பை ஆறு அணைக்கட்டு உள்ளது.
இங்கு, நேற்று காலை 9.00 மணிக்கு, இறந்த நிலையில் பச்சிளம் பெண் சிசு உடல் கிடந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வி.ஏ.ஓ., வினோத்குமார் புகாரின் பேரில் வழங்குப்பதிந்து, சிசு உடலை வீசிச்சென்றவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.