/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
/
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
ADDED : அக் 26, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பத்தில் கடலில் மீன் பிடித்தபோது நீரில் மூழ்கி இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது.
மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி, 42; மீனவர். இவர், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க தனியாக சென்றுள்ளார்.
அப்பொழுது கடல் அலையில் சிக்கி பைபர் படகு மூழ்கியது. இதில் கலைமணி கடலில் மூழ்கி இறந்த நிலையில் மதியம் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

