sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது

/

காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது

காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது

காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது


ADDED : ஏப் 18, 2025 08:06 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக, காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூர், கீரைக்காரர் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜ்குமார், 20; இவரும், அம்மணகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் மகள் சிவரஞ்சனி, 20, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

புதுச்சேரி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிவரஞ்சனி கடந்த 15ம் தேதி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பினர்.

சிவரஞ்சனியின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொள்ளவதற்கு முன், ராஜ்குமாரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளது தெரியவந்தது.

விசாரணையில், ராஜ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்துகொண்டது ஊர்ஜிதமானது.

அதையடுத்து, சிவரஞ்சனியை தற்கொலைக்கு துாண்டியதாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us