
செஞ்சி: செஞ்சியில் அரசு மருத்துவமனை, வேட்டவலம் லயன்ஸ் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லுாரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
டாக்டர்கள் பாலகோபால், ராஜலட்சுமி, செந்தமிழ் முரசு ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர்.
செவிலியர் ஆதிலட்சுமி, மருந்தாளுநர் ஸ்ரீதர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு செவிலியர்கள், ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரி பயிற்சி மாணவிகள், பாலுாட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம் திண்டிவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சங்கத் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் முன்னிலை வகித்தனர். தாய்ப்பாலின் சிறப்பு குறித்து டாக்டர்கள் அமுதாம்பிகை, நஸ்ரின், சுவேதா ஆகியோர் பேசினர்.
சங்க நிர்வாகிகள் பிரபாகரன், வெங்கடேசன், கார்த்திக் கருணாகரன், ராமமூர்த்தி, அன்னை சஞ்சீவி உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.

