sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்

/

மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்


ADDED : பிப் 23, 2024 11:50 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை கண்டித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பருவத்தின்போது தினமும் 400 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் கரும்பு ஏற்றி வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் மாட்டு வண்டிகளை ஆலை நிர்வாகத்தனர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றனர். அதனால் தங்களுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது எனக்கூறி நேற்று காலை 9:20 மணியளவில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

அதனையேற்று 9:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us