/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அகூர் ஊராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி
/
அகூர் ஊராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி
ADDED : அக் 05, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலம் ஒன்றியம் அகூர் கிராம சாலை ஓரத்தில் உள்ள கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்தது.
கிராம தெருக்கள், தீவனுார் வெள்ளிமேடு பேட்டை சாலையில் உள்ள கால்வாய்கள் மற்றும் பாலங்களின் அருகே உள்ள புதர்கள், மண் குவியல்களை ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
இதனால் பருவ மழை காலத்தில் நீர் அடைப்பு ஏற்படாமல் விரைவாக அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இப்பணியை அகூர் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத், ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்து கண்காணித்தனர்.