
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் முன்னிலையில் 108 பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மேலாளர் சதீஷ், காசாளர் மணி, குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.