sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது கார் மோதி விபத்து தொழிலாளர்கள் 2 பேர் பலி

/

பைக் மீது கார் மோதி விபத்து தொழிலாளர்கள் 2 பேர் பலி

பைக் மீது கார் மோதி விபத்து தொழிலாளர்கள் 2 பேர் பலி

பைக் மீது கார் மோதி விபத்து தொழிலாளர்கள் 2 பேர் பலி


ADDED : நவ 19, 2024 07:44 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் மணி, 30; நெல்லிமலையான் மகன் குமார், 35; வெள்ளகுள தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி, 35; விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும் நேற்று மாலை வேலை முடிந்து, பல்சர் பைக்கில் வேட்டவலத்தில் இருந்து கண்டாச்சிபுரம் நோக்கி வந்தனர். பைக்கை மணி ஓட்டினார்.

கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமம் அருகே 5:30 மணியளவில் வந்தபோது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கியா கார், பைக் மீது மோதியது.

இதில் மணி, குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்தி படுகாயமடைந்தார்.

கண்டாச்சிபுரம் போலீசார், படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us